மதிசுதாவின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்ன?- ஒரு சமகால அலசல்



முற்குறிப்பு :
இப்பதிவானது இஸ்லாமியர் மீது வெறிபிடித்த சில வெறியர்களுக்காகவே எழுதப்படுகிறது. இதை வைத்துக்கொண்டு யார் மீது யார் வெறியா இருக்காங்க என்பதை  நடுநிலையோடு சிந்திக்க கூடிய பதிவர்களிடமே முடிவை ஒப்படைக்கிறேன்.இப்பதிவானது  வெறியோடிருப்பவர்களுக்காக மட்டும் என்பதால் ஈழபதிவர்கள் என பொதுபடுத்த மனம் வரவில்லை. அப்படியும் எங்கேனும்  மனதினை புண்படுத்தியிருந்தால்  அதற்கு நானே பொறுப்பேற்று முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் (அனைத்திற்கும் இறைவனிடம் பதில் சொல்லி ஆகவேண்டுமே)

ன்னை தவிர அனைவரும் மூளைசலவை செய்யப்பட்டவர்கள் என கருதிக்கொண்டு சில அறிவாளிகள் திக்கித் திணறி கொண்டிருக்கிறார்கள்.  இயற்கையின் சக்கரத்தில், காலநிலை மாறலில் ஏற்படும்  புவிமாற்றமே தன்னைத்தானே அறிவாளி என கூறி கொள்பவர்கள்களுக்கும் தன்னை தவிர மற்றவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லை என கூறிக்கொள்பவர்களுக்கும் தூண்டு கோலாக அமைந்து விடுகிறது. இப்பதிவானது சில வெறிபிடித்த பதிவர்களின் மிலெச்சத்தனமான வெறிவாத தாக்குதலாலேயே இடப்படுகிறது.

இதற்கு அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பலாம்.. ஏன் மற்ற மதத்தை பற்றி எழுதுறீங்க எனலாம்.  மதம் என்பது அவரவர் தனிபட்ட சுதந்திரம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால்...
சமூகத்தில் பார்க்கும் விஷயங்களை, பிரச்சனைகளை பகிர்வதற்கும் அலசுவதற்கும் "சமுதாயத்தில் ஒருவர்" என்ற அடையாளமே போதுமானது!

நீ இஸ்லாமியன் நீ சொல்ல கூடாது!
நீ கிருஸ்டியன் நீ சொல்ல கூடாது!
நீ இந்து.. நீ சொல்ல கூடாது!

என்ற முட்டாள்தனமான வாதத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்!


நான் மூட நம்பிக்கைகளை வெறுப்பதால் மட்டுமே  சமுதாயத்தில் நடக்கும் மூடநம்பிக்கைகளை பற்றி கதைக்க முடியும். அந்த வகையிலேயே என் கண்முன் நடந்த ஒரு  நிகழ்ச்சியை என் பேஸ்புக்கில் பதிந்தேன்.  இது முதல் முறை அல்ல... என்னை சுற்றி இருக்குறவங்களுக்கு நல்லாவே தெரியும். ஜாதி பற்றிய என் கண்ணோட்டம், குருபூஜை கலவரம், தர்கா வழிபாடு, அறியாமையில் இருக்கும் இஸ்லாமியர்கள் செய்யும் தவறுகள் என அனைத்தும் இதே ப்ளாக்கில் தான் இருக்கு! எங்கும் கால் முளைத்து போய்விடவில்லை...

கடவுள் பக்தி என்பது அவரவர் விருப்பத்தின் பெயரில் வழிபடவேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. ஒருவர் ஞாயிறன்று போவேன் என்பார், ஒருவர் 5 வேளை தொழுவேன் என்பார், இன்னொருவர் வெள்ளி கிழமை போவேன் என்பார்... இவையெல்லாம் கடவுளுக்கும் மனிதனுக்குமான விஷயம். அதை விடுத்து இப்போதும் கடவுளின் பெயரை கூறி உடலை வறுத்திக்கொள்வதில், தீ மிதிப்பதில், கையில் தீ சட்டியை ஏந்தி கடவுளிடம் முறையிடுவதை மூட நம்பிக்கையாகவே பார்க்கிறேன். இப்படி பார்ப்பதற்கு நான் ஒன்னும் இந்துவாகவோ, கம்யூனிஸ்ட்டாகவோ அல்லது பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து வந்தவளாகவோ இருக்க வேண்டிய அவசியம் எங்கேயிருந்து வந்தது? இல்லை ஒரு முஸ்லீம்மா இருந்துட்டுட்டா சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் பற்றிய நல்லது கெட்டதெல்லாம் தெரிஞ்சுக்க கூடாதுன்னு கண்ண மூடிட்டு போக இங்கே என்ன சர்வாதிகார ஆட்சியா நடக்குது?

இதெல்லாம் கேட்டா புர்கா ஏன் போடுறீங்க? அது மூட நம்பிக்கை தானே என்கிறார்கள். ஆடையில் மூடநம்பிக்கை எவ்வாறு வந்தது???
மீண்டும் எதாவது கேட்டால் அரசியல்வாதி பதில் சொல்வது போல் சம்மந்தமே இல்லாமல் முன்பின் ஆராயாமல், ஒரு மணி நேரம் கூட செலவழித்து உண்மை நிலை, வரலாற்று பிண்ணனி, நபியானது எந்த வயதில்? நபியானதற்கு முன் இருந்த அறியாமை காலம் பற்றி, நபியான பின் திருமணத்தில் கொண்டு வந்த சட்டதிட்டங்கள் பற்றி ஆராயாமல் காப்பி பேஸ்ட் செய்து நபி (ஸல்) பற்றி அவதூறு கூறுவார்கள்.

ஏன் இப்படி தனிமனித தாக்குதலையும், மதத்தின் மேல் தாக்குதலையும் நடத்தும்  நேரத்தில் தீமிதி, அக்னிசட்டி, வேல்குத்துதல் போன்றவற்றிற்கு தர்க்கரீதியான விஷயங்களை அறிவியல் ரீதியான விஷயங்களை  கொண்டு வந்து கொட்டுங்களேன்... அப்ப இதெல்லாம் மனிதனின் நன்மைக்குதான் என்ற பட்சத்தில் நானும்  "பண்டைய காலத்தில் கடைபிடிக்கப்பட்ட நவீன மருத்தவ விஷயங்கள்"ன்னு பதிவு போட்டிருப்பேனே..

மதுரன் ரவீந்திரன் பூப்புனித நீராட்டு விழா பற்றி சிறுகதை எழுதிய போது வராத கோபம் ஆமினா எழுதும் போது மட்டும் மதவெறி பிடித்தவளான மாயம் என்னவோ??

நாற்று குழுமத்தில்  தேவரடியாள் முறை பற்றி குறிப்பிடும் போது ஆமினாவிற்கு பிடிக்காத மதவெறி வேல்குத்துதல் பற்றி ஸ்டேடஸ் போட்ட போது  வந்துவிட்டதோ?

ஜோசியம் பற்றி இஸ்லாத்தின் பார்வை என்ன? என கேட்டபோது அதெல்லாம் சுத்த மூடத்தனம், மூட நம்பிக்கை என குறை சொன்னபோது வராத மதவெறி  புதுசா பொறந்து வந்துடுச்சோ?  அப்போதெங்கே போனீங்க மதஎதிர்ப்பு வெறியன்
ம.தி.சுதா???? முக்கியமாக தாக்குதல் நடத்தப்பட வேண்டிய அந்த கால ஓட்டத்திற்கான முதல் தாக்குதலை கோட்டை விட்டுட்டு இப்பதான்  சகோதரி ஆமினா முகமட்டிடம் இருந்து ஆரம்பிக்கிறீங்களோ?

உங்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால் ஒதுங்கிவிடுங்கள். கேள்வி கேட்டு பதில் பெற்று தெளிவு பெற  நினைக்கும் என்னை தடுக்க நீங்க யாருங்க? ஒரு விஷயத்தை கண்மூடித்தனமாக அப்படியே ஆதரிக்கவோ எதிர்க்கவோ நான் ஒன்றும் முட்டாள் அல்லவே? இறைவன் கொடுத்த மூளையை அடகுகடையிலும் வைத்துவிடவில்லையே!

இஸ்லாமியர் மீதான வெறியினை  நீங்க அவசரப்பட்டு  கீழ இறக்கிவிடவேண்டாம். அப்படியே இருங்க. ஆனா இயந்திரன் படத்தில் சிட்டி ரோபோவுக்கு மூளையில்  சிப் போட்டது போல் செயல்படவேண்டாம். கூகுள் இருக்கு! கொஞ்ச நேரமாவது ஒதுக்கி தகவல்களை திரட்ட முயலுங்கள்... நடுநிலையை கடைபிடியுங்கள்!

வாழ்த்துகள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்!

உங்க ஆளுங்களே இப்படிதான்... பொண்ணுங்கள் எங்கும் விடுறதில்ல, மொகத்த மூடுன்னு ஓவர்ரா கன்ட்ரோல் பண்ணி அடிமைபடுத்துறாங்க... எப்பதான் திருந்த போறாங்களோ..................................
மேலும் வாசிக்க கீழே உள்ள தலைப்பில் சுட்டவும்.
 


(கமென்ட் பாக்ஸ் மூடி வச்சுருக்கேன் :-)  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இஸ்லாமிய பெண்மணியும் சில மிரட்டல்களும்

பலநாள் கனவு இது! கனவை நனவாக்க சாப்பாடு தண்ணி இல்லாம பாடுபட்டு, தூக்கம் அற்று, இராப்பகல் எனப்பாராது  உழைத்து உருவானது தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..................

ஹி..ஹி..ஹி.. இப்படியெல்லாம்  சொன்னா பொய் பேசிட்டு திரியுறீயான்னு கொலவெறியோட வருவாய்ங்க! :-)

எந்த பில்டப்பும் இல்லைங்க. உண்மைய சொல்லணும்னா "இரண்டே நிமிடத்தில் மனதில் எண்ணமாய்  ஜனித்து பத்துமணி நேரத்தில் பிறந்தவள் தான்"  எங்கள் புதிய தளமான "இஸ்லாமிய பெண்மணி". மதியம் ப்ளான் பண்ணோம். சாயங்காலம் ப்ளாக் உருவாக்கினோம். நைட் போஸ்ட் போட்டோம். காலைல எல்லார் பார்வைக்கும் வைத்தோம். ப்ளாக்ஸ்பாட்ல இருந்து டாட் காம்க்கு மாறினோம்.....அவ்வ்வ்வ்வளவே தான்!

பதறாத காரியம் சிதறாதுன்னு சொல்லுவாங்க. ஆனா இத்தளத்தின் விஷயத்தில் இந்த கூற்று பொய்யாகி போனது. ஒவ்வொரு படியும் அவசரத்தில் தான் ஏறினோம். ஆனா எந்த ஒரு இடத்திலும் தடுமாறவில்லை. கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். (சேர்ந்தாப்ல பதறினா செதறாது போல ஹி..ஹி..ஹி..)

ஆம்
பலரின் மனதில் இஸ்லாமிய பெண் என்றாலே  அடிமையாளவள், பிற்போக்குவாதிகளால் அடக்கி ஒடுக்கி ஆளப்பட்டு உரிமைகள் நசுக்கப்பட்டு மூலையில் ஒதுக்கி வைக்கப்பட்டவள் என்ற எண்ணம் இருக்கு. எத்தனையோ பேர்  எத்தனையோ ஆதாரங்கள் காட்டியும் யாரும் கேட்பதாய் இல்லை. இஸ்லாமிய பெண் என்றாலே திறமை அற்றவள், படிப்பறிவு இல்லாதவள், உலகறிவு என்பதே இல்லை என்பது போல் பல இடங்களிலும் எண்ணங்கள் மாற்றப்பட்டுவிட்டது. அந்த எண்ணத்தை மாற்றவும், பலரின் திறமைகளை உலகுக்கு அறிய காட்டி அதன் மூலம் "இறைவனை தவிர யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை" என்பதை நிரூபிக்க வேண்டி உருவாக்கப்பட்டது தான் இந்த புதிய தளம் "இஸ்லாமிய பெண்மணி"

இத்தளம் முஸ்லீம் பெண்பதிவர்கள் மற்றும் பேஸ்புக்கில் மார்க்கப்பணி செய்யும் சகோதரிகளால் நடத்தப்படவிருக்கிறது.
 இஸ்லாம் சார்ந்த ஆக்கங்கள், பெண்கள் பற்றிய குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்,  விவாதங்கள், குர்ஆன் வசனங்களை மெய்பிக்கும் மருத்துவம்/அறிவியல் செய்திகள் என அனைத்துவிதமான விஷயங்களை அலசும் தளமாக இருக்கும்.   மேலும்  அனைத்து தரப்பினருக்கும் பயன்படக்கூடிய விஷயங்களும் இடம் பெறும். (சமையல் இருக்காது... டோன்ட் க்ரை :-)

தளத்தினை காண இங்கே சுட்டவும்- இஸ்லாமிய பெண்மணி
அறிமுகப்பதிவு காண - சிறகுகள் விரியட்டும்..

அறிமுகப்பதிவிற்கே நாங்கள் எதிர்பார்த்திராத அளவுக்கு ஆதரவும் உற்சாகமும் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.  உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் தளம் செயல்படும் (இறைவன் நாடினால்).

எங்கள் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என விரும்பினால் உங்கள் ஆக்கங்களை எங்களுக்கு அனுப்புங்கள். மற்ற சகோதரிகளையும் எழுத தூண்டுங்கள். அவர்களின் திறமையை உலகறிய செய்யுங்கள். அவர்களின் பெயர் சேர்த்து அவர்களின் ஆக்கமாகவே வெளியிட காத்திருக்கிறோம்.  
அனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - islamiyapenmani.com@gmail.com 
முஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளையும் மேற்கண்ட மெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் மேற்கண்ட முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.

தொண்ட வரண்டு போச்சு... சோடா ப்ளீஸ்.....

ஆங்க்...
சொல்ல மறந்துட்டேன்...
தலைப்புல இருக்குற மெரட்டல் பத்தி சொல்லலையே...
த்தோ சொல்றேன்....

1.உங்களுக்கு  தெரிஞ்சவங்ககிட்ட இந்த தளம் பற்றி சொல்லி வைச்சுடுங்க.  
2.கீழ  சேர் பட்டனை அழுத்தி அவுகவுக வாலில் சேர் பண்ணுங்க.
3. எத்தன க்ரூப்ல மெம்பரா சேர்ந்திருக்கீங்களோ அத்தனை க்ரூப்லையும் சேர் பண்ணிடுங்க...
4. அவுகவுக ப்ளாக்ல எங்கள் தளத்திற்கான இணைப்பு கொடுத்துடுங்க. படம் ரொம்ப முக்கியம்  அமைச்சரே :-) :-)
5. புதியதளத்தில் பாலோவர்ஸ்ஸாகிடுங்க (பயபுள்ளைக என்னதான் சொல்ல வருதுன்னு பாருங்களேன் :-)

ஹி..ஹி..ஹி.. அன்பு மிரட்டல் தான் வேறொன்னும் இல்ல! கோச்சுக்காதீங்க... இதெல்லாம் நான் சொல்லமலேயே நீங்க செய்வீங்கன்னு தெரியும் ஹி..ஹி..ஹி... (பின்ன இப்படிலாம் தலைப்பு வைக்கலன்னா  எப்பதான் நானும் பிரபல பதிவராவுறது அவ்வ்வ்வ்வ்வ்)

வர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா

டிஸ்கி- கள்ளஐடியின்  மைனஸ் ஓட்டுக்கள் வரவேற்கப்படுகின்றன.. எங்கே அஞ்சே  நிமிஷத்துக்குள்ள 25 ஓட்டையும் வரிசையா போட்டுடுங்க பாக்கலாம்...... ஜெட்ட்ட்ட்டா வேலை செய்யணும்

முக்கிய  அறிவிப்பு : வலையுலகில் எத்தனையோ பேர் ஒன்றாய் இணைந்து ப்ளாக் வைத்திருக்கும் போது  'எங்களை பற்றிய உண்மை நிலைகளை அறிய ஒன்றிணைந்து  தளம் உருவாக்கியது'  தவறுன்னு சொன்னா  ஹி..ஹி..ஹி..ஹி... சிரிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை :-) :-) :-) வாழ்க ஜனநாயகம்! வளர்க நடுநிலைமை!

சிறகுகள் விரியட்டும்!!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சீரியஸாக்கும் சீரியல்ஸ்!!!


நா ஏன் சீரியல் பாக்குறதில்லைங்குறதன் காரணத்தை, ரகசியத்தை, உண்மையை உலகுக்கு  போட்டு உடைக்கும் தருணம் இது! என்னைய தடுக்காதீங்க! விடுங்க!விடுங்க! நா இத இப்பவே சொல்லியே ஆகணும்!!!

  செம பில்டப்பா இருக்கோ:-)  சீரியல் பத்தி பேசுறோம்ல? அதெல்லாம் அப்படி தான் செமடாப்புல பில்டப்பு இருக்கும்!

சரி இப்ப என்ன்ன்ன்ன்ன்ன்னா மேட்டர்ன்ன்ன்ன்னா...  ஐ டோன்ட் லைக் அழுவாச்சி பக்கிஸ்... சீரியல் பிடிக்காதுன்னு சொல்றதுக்கான மொக்கையான காரணமா இருக்கோ! சரி சரி முட்டைய ஓரம்மா வைங்க! ஆம்லேட் போட ஒதவும்!

இரு பெண்கள் பேசிக்கொண்டாலே அது துளசியையும் செல்லம்மா பத்தியுமா தான் இருக்கு! இத்தனைக்கும் ஏன்??  ஹாஸ்பிட்டல்ல மூச்சி தெணறிட்டிருக்குற நெலமையிலையும் ரிசப்ஷன்ல சன்டீவிய போட சொல்லும் அளவுக்கு அதிமுக்கிய நடைமுறை பழக்கமாக மாறிடுச்சு!  இலங்கைக்கு எதிரா ஓட்டு போட்ட நாடு எதுன்னு கேட்டா பதில் வருமா??? ஆனா சீரியல்களின் எபிசோட் முதல் அதில் உள்ளவர்களின் பெயர் வரைக்கும் செம அத்துபடி நமக்கு! இந்த பதிவினூடாக காலைல பத்துமணில இருந்து ஆரம்பிச்சு நைட் 11 மணி வரைக்கும் கொலையா கொல்லும் மெகா சீரியல்ஸின் மொக்க விஷயங்களை நாமும் கொஞ்சம் கொலையா கொல்லபோறோம்!

நன்றி
அடுத்தபதிவில் சந்திக்கலாம்..
தொடரும்.. மலரும்... முற்றும்... பூக்கும்...  சாகும்...

ஹி..ஹி..ஹி.. இப்ப என்ன சொல்லிட்டேன்னு முட்டைல ஆசிட்ட மிக்ஸ்
பண்றீங்கோ?!! பின்ன என்ன? மிஞ்சி போனா ஒரு கல்யாணம் 8 மணி நேரத்துல நடந்துடும்! ஆனா இவனுங்க காட்டுற கல்யாண வீடாகட்டும் எழவு வீடாகட்டும் எல்லாமே மாசக்கணக்குல  நடக்குது! அபின்னு ஒரு அக்கா 2 கொழந்தையையும் பாட்டி ஆகுற வரைக்கும் கோலம் போடுறத விடாது போலனு செமையா பயந்தே போயிட்டேன்! ஒருவழியா போயிட்டாக! இப்ப கஸ்தூரி அக்கா தான் விடாது தொறத்துது!

சரி சீரியல்ல இருக்குற மொக்க விஷயத்த பாக்கலாம்! :

  •  ங்க பக்கத்துவீட்டு  பேச்சியம்மா, கண்ணாத்தா கூட கல்யாணத்துக்கு பொறவு சுடிதார்ல கலக்குதுங்க! ஆனா சீரியல்ல வர பக்கிங்க மட்டும் மொதல்ல மாடர்ன்னா இருக்குங்களாம்... கல்யாணம் ஆய்ட்டா சேல மட்டும் தான் போடுவாங்களாம்! எப்ப பா திருந்த போறீங்க??? அய்ய்யோ அய்யோ....
  • ருப்பு, வெள்ள தான் இப்ப இருக்குற ட்ரென்ட்!   ஆனா பாருங்க! கருப்பா இருக்குற ஆளையெல்லாம் போட மாட்டானுவ! வெயிலுக்கு காட்டாம வளத்த வெள்ளச்சிக்கு கருப்பு பெயின்ட் அடிச்சி விடுவானுவ! எதுக்குன்னு கேக்குறீங்களா???? 1000வது எபிசோட்க்கு பொறவு   ஒரு ட்விஸ்ட் வைக்கதேன்! பெயின்ட் முகக்ரீம் கம்பெனிக்கு செம வெளம்பரம்! வாழ்க வளமுடன்
     
  • தென்ன மாயமோ தெரியல! மந்திரமோ புரியல! ஒட்டுமொத்தமா எல்லா அம்மணிகளும்  மாமியார்கிட்ட ரொம்பதேன் பம்முதுங்க! அதே மாதிரி ஒன்னு விடாம எல்லா சீரியல்ஸ் அத்தைகளும்  வில்லியாவே இருக்காங்க! கொட்டோ கொட்டுன்னு மழ பெய்யும் போது மாமியார் வீட்ட விட்டு அனுப்புறதும்! இவுக எதையும் தட்டி கேட்காம இருக்குறதும், மாமியாரின் திட்டுக்களை "தேன் வந்து பாயுது காதினிலே"ங்குற கணக்கா கண்டுக்காம இருக்குறதும்............. சரி சரி இதெல்லாம் சீரியல்ல பாத்தாதான் உண்டு ;-)
     
  • துல பெரிய கொடுமை என்னான்னா  ரோட்ல மயக்கம் போட்டு ஒருத்தன் விழுந்தா கூட "எனக்கென்ன போச்சுன்னு" சொல்லும் மனிதநேயம் நிறைந்த நம்மாளுங்க  சீரியல் ஆத்தாக்களின் பொய் அழுகையை "ஐய்யோ பாவமே, இப்படி ஆச்சே! ச்சே! இப்படியெல்லாமா கொடும நடக்கும்"னு லைவ் கமென்ட்ரி கொடுக்குறது பார்த்தா...... ஹன்ட்ரட் பெரியார்ஸ் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவேமுடியாது! (பலருக்கு இரக்க குணம் உண்டு என்பதை சீரியல் பாக்கும் போது தான் தெரியுது!)
  • விங்க அறுக்குறதே தாங்கமுடியலன்னு செவத்துல முட்டிட்டிருந்தா..... ஹிந்தி டப்பிங் சீரியல் மூலமா  அறுக்காம நேரடியாவே சாவடிக்கிறாய்ங்க! அடிக்கடி டூயட் சாங்க் வேற!  ஒரு ரியாக்‌ஷன்க்கே ஒரு எபிசோட் ஓட்டிடுறாய்ங்க! தெய்வமே என்னைய காப்பாத்து!
  • நீ உண்மையிலேயே ஒரு முஸ்லீம்மான்னு ஒரு பிரன்ட் கேட்டாங்க! இதென்ன எனக்கு வந்த சோதனைன்னு "ஏன்ப்பா இப்படியெல்லாம் சொல்ற?"ன்னு கேட்டா, " உனக்கு தான் 2 புருவம் ஒன்னா சேரலையே?!  உருது,அரபில பேசலையே?!"ன்னு சொன்னாங்க!  இதுக்கு எப்படி பதில் சொல்றதுன்னு மூளைய தட்டி எழுப்பிட்டிருக்கும் போதே "ஆமா..... உங்க(?????????!!!) தர்கால பேய்,பைத்தியம்லாம் தெளிய வைக்கிற சக்தி இருக்காம்ல?!  உண்மையா?ன்னு ஒரு அடுத்தடுத்த கேள்வி  கேட்டா!  
    உனக்கு எப்படி இந்த அளவுக்கு அறிவு வந்துச்சுன்னு கேக்கும் போது தான் பயபுள்ள சொல்லுது... டெய்லி நாதஸ்வரம்,தபேலா,கித்தார்  போன்ற ஒலக பிரசிதிப்பெற்ற காவியங்களை பாத்திட்டிருக்கான்னு! 

நம்ம கலைஞர் சரியாதான் யோசிச்சு  எலவசமா  கலர்  டீவி கொடுத்திருக்காரு! அதனாலேயே குட்டீஸ்க்கும் பெரிசுகளுக்கும் நடக்கும் ரிமோட் சண்டை இப்பலாம் இல்ல,நெஹி,லேது!  முன்னலாம் சொந்தக்காரங்க  வீட்டுக்கு சாயங்காலமா போகும் வழக்கம் இருந்துச்சு! அம்ம்ம்ம்ம்ம்ம்மாடி இப்பலாம் சாயங்காலம் 6 டூ பத்து திருடன் வீட்டுக்குள்ள வந்தாலும் கண்டுக்க மாட்டாய்ங்க! நாம போனாவா வாங்கன்னு சொல்லி உபசரிச்சுட போறாங்க?!!

பொழுது போக்குக்காக ஏற்படுத்திக்கொண்ட விஷயங்கள் பலவற்றிற்கும் நாம் அடிமையாகிவிட்டது போல்  தான் இந்த சீரியல்களும்!  சரியான மனக்கட்டுப்பாடு இல்லை என்றால் கூடியவிரைவில்  சைக்கோக்கள் வீட்டில் உருவாவது கேரண்டி!

சீரியல்ஸின் உன்னத உயர்நோக்கு கொள்கைகள் ஏதேனும் விடுபட்டிருப்பின்  மன்னிச்சூ மன்னிச்சூ மன்னிச்சூ!!!! மொக்கை  விமர்சனங்களை வரவேற்கப்படுகின்றன! குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பத்து துரதிஷ்ட்டசாலிகளுக்கு பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை  டீவிடியும், முகவையின் விடிவெள்ளி ரித்திஷ் குமாரை சந்திக்கும் வாய்ப்பும் கொடுக்கப்படும்! ஹி..ஹி..ஹி..

டிஸ்கி: குட்டிசுவர்க்கத்தில் இருந்த ப்ளாக்ஸ்பாட்டை தூக்கியாச்சு! அந்த இடத்தில் .com மாத்தியாச்சு!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சொல்ல விரும்பினேன்-என்ன ஆனார் தொப்பி தொப்பி??

சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ:ஆளாளுக்கு ஒவ்வொரு பேருல  எழுதுறாங்க. ஒருத்தரு கொத்து பரோட்டாங்குறாரு, ஒருத்தர் ஸ்பெஷல் மீல்ஸ்ங்குறாரு.. இன்னொருத்தர் மசாலா மிக்ஸ்ங்குறாரு.. நானும் ரொம்ப நாளா யோசிச்சேன்.. ஒன்னும் சரிபட்டுவரல (ப்ளாஸ்க்ல இருந்தா தானே டம்ளர்க்கு காப்பி வரும் ஹி..ஹி..ஹி..)  அருசுவை பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்கு சகலகலா வள்ளி வனிதா அக்காவை பத்தி தெரியாம இருக்காது. வனிதா அக்காவை தெரிஞ்ச யாருக்கும் 'சொல்ல விரும்பினேன்' பத்தி தெரியாம இருக்காது. அன்றன்றைய நாளில் நம் மனதில் உதித்த எண்ணங்கள், சந்தித்த மனிதர்கள், நடந்த காமெடிகள், ஊர்வம்பு, அரசியல் என சொல்ல விரும்பினேன் தலைப்பின் கீழ் சுவாரசியமான அரட்டை போகும்!  நானும் அதையே கப்புன்னு புடிச்சுக்கிட்டேன் :-) இனி இந்த தலைப்பின் கீழ் நானும் சொல்ல விரும்புவதை சொல்ல போறேன்! (ப்ளாக்ல சொந்த விஷயம்லாம் எழுதாதீங்கன்னு யாரும் போர்கொடி தூக்கிட்டு வந்துடாதீங்கப்பா... நமக்கு இந்தளவுக்குதேன் வரும்! என்னன்னா.... எப்படின்னா..... சுருக்கமா சொல்லணும்னா... சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ.... அவ்வ்வ்வ்வ்)

புன்னகை சிந்தி அன்பை அள்ளுங்க! :
எங்க வீடு ஊருக்கு வெளியே இருப்பதால் எது வாங்க வேண்டும் என்றாலும் டவுன்க்குதான் வரணும். சேர் ஆட்டோ நெஹி... சோ மினிபஸ்தான். எப்பவும் செம நெரிசலா இருக்கும்! 15 நிமிஷம் பயணப்படும்  எனக்கே செம எரிச்சலா இருக்கும்! அப்ப ட்ரைவருக்கும் கண்டாக்கருக்கும் ஹி..ஹி..ஹி.. கன்டக்டருக்கும் சொல்லவா வேண்டும்?  மெயின் ஸ்டாப்க்கு முன்னாடியே நம்ம வீடு! (அப்ப எனக்கும் சொத்துல பாதிய தான்னு கேட்டுடுவாய்ங்களோ?? நமக்கென்ன கவல? ஹவுஸ் ஓனர்ல வருத்தப்படணும்)  எப்பவும் ஒரு ஆளுக்காக நிறுத்துவதில்லை. ஆனா நாமதான் செம சோம்பேறியாச்சே! சில முறை கெஞ்சிபார்த்து நொந்துட்டேன். ம்ஹூம்... கடமையில் கண்ணா இருந்தாரு!  3 முறை தொடர்ச்சியாக என் வீட்டருகில் ஒரு பெண்மணி கை அசைத்து பஸ்ஸில் ஏற அந்த கேப்பில் நானும் டக்குன்னு இறங்கிட்டேன். இறங்குவதற்கு முன் ட்ரைவரிடம் "ரொம்ப நன்றிங்கண்ணா" என மகிழ்ச்சியோட சொல்ல மறக்கவில்லை மூன்று முறையும்!  இப்பlல்லாம் எங்க ட்ரைவர் அண்ணா என் வீட்டு வாசலிலேயே இறக்கிவிட்டுடுவார். கன்டக்டர் தம்பிக்கும் கரேக்ட்டான சில்லரையை (புன்னகையோடு) கொடுத்து அவர் வேலையை சுலபமாக்குவதால் அவரும் நம்ம தோஸ்த் ஆய்ட்டார். ட்ரைவர் அண்ணாவே மறந்தாலும் கன்டக்டர் தம்பி வேகமா விசில் அடிச்சு வீட்டு வாசலில் பஸ் நிறுத்த வச்சுடுவார். நாம்(ன்) செய்யும் சின்ன சின்ன விஷயங்களில் கூட  எந்தஅளவுக்கு அன்பும் மரியாதையும் பெரிய அளவில் கிடைக்கும்னு உணர்த்திய விஷயம் அது!
 


மன்னிப்புகேட்டா மானம் போகுமா? லூஸ்ல விடுங்க பாஸு:
பத்து நாட்களுக்கு முன் அக்காவுக்கும் எனக்கும் செம சண்ட! எப்படியெல்லாம் வார்த்தை விட்டால் ஒருவர் மனதால் நோகுவார் என்பது அக்காவுக்கு கைதேர்ந்த விஷயம். என்ன தான் நம்ம பக்கம் நியாயம் இருந்தாலும் வாய் தொறக்கவே முடியாது!  சண்டையின் உச்சமாக "என் வீட்டு வாசப்படி மிதிச்சுடாத"ன்னு சொல்லிட்டு போயிட்டா. நானும் பத்து நாளா யோசிச்சேன். சரி வாசப்படியை மிதிக்காம தாண்டி போய்டலாம் இல்லைன்னா ஏணிப்படி மூலமா பால்கனி வழியா வீட்டுக்கு போய்டலாம்னு முடிவு பண்ணி போனேன். செய்யாத தப்புக்கும் அக்காவிடம் மன்னிப்பு கேட்டேன். அப்பறம் என்ன? அக்கா பயங்கரமா பீல் பண்ணா... மானம் போகும்னு கவலப்பட்டா கஷ்ட்டப்பட்டு சமைக்கணுமே? அவ்வ்வ்வ்வ்வ்...
 இப்பலாம் டீயை தவிர வேற எதுவும் வீட்டில் செய்றதில்ல ஹி...ஹி...ஹி.. உக்கார்ந்த இடத்திலேயே சாப்பாடு சாப்டுறது எவ்வளவு சொகமான அனுபவம் :-) இதனால என்ன சொல்ல வர்ரேன்னா (போதும்.. என்னன்னு புரியுது... நீ சீக்கிரம் முடிக்கப்பாரு) போகும் போது என்னத்த கொண்டுட்டு போகப்போறீங்க? விரோதமும், மனகசப்புகளையுமா? லூஸ்ல விடுங்க பாஸு!

எங்கே போனார் அந்த பதிவர்?? :
பதிவுலகிற்கு வந்த புதிதில் முதன் முதலில் ஹைதர் அண்ணாவை தான் அண்ணா என உரிமையுடன் கூப்பிட்டேன். அவரும் என்னை தங்கை எனவே அழைக்க ஆரம்பித்தார்(நாங்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என அப்போது தெரியாது) அதை பார்த்த பதிவர் தொப்பி தொப்பி  "எனக்கும் இப்படியாக உங்களை அக்கா அல்லது தங்கச்சி என சொல்ல ஆசையாக இருக்கு" என சொன்னார். அன்றிலிருந்து அவரும் எனக்கு சகோதரர் ஆனார்.  நான் ப்ளாக் எழுதாமல் இருந்த 6 மாத இடைவெளியில் மறக்காமல் அடிக்கடி பின்னூட்டம் மூலம் நலம் விஷாரித்து ஒரு உண்மையான அண்ணனாகவே நடந்துக்கொண்டார்(என்னால் தான் பதில் போட முடியவில்லை). எப்போதும் நம் எண்ணங்களோட ஒத்துபோகாதவர்களின் பேச்சு, எண்ணம், ரசனை, நடவடிக்கைகளை கண்காணிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும் (உளவியலாம்). இவர்கள் எப்போதும்  தர்க்கரீதியாய் எவரிடத்திலும் பேசக்கூடிய திறமைபெற்றவர்கள். தொப்பி தொப்பியும் அப்படிதான்.  அவரின் பல பதிவுகளில் நடக்கும் விவாதசண்டை செமையா இருக்கும். பதில்களுக்கு அவர் கொடுக்கும் பதிலடிகளும் செம நெத்தியடி! நச் தான்!  அண்ணாவின் தியேட்டர் பற்றி, ஆம்வே பற்றி, பணம் பறிக்கும் விளம்பரம் பற்றி, மதத்தின் பெயரால்  நடத்தப்படும் கொள்ளை பற்றிய சமுதாயத்தில் புரட்சி ஏற்படுத்தக்கூடிய  பதிவுகள் என்றுமே மறக்க முடியாதவை!   நான் ரீஎன்ட்ரி கொடுப்பதற்கு ஒரு வாரம் முன் கடைசியாய் பதிவு போட்டார். அதன் பின் எப்பதிவும் காணவில்லை. சில மாதங்களுக்கு முன்  என் பதிவுக்கு அவரின் ஓட்டு பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் மீண்டும் ஏமாற்றமே! அவர் எழுத வரவில்லை! ஏன் ஒதுங்கிவிட்டார் என தெரியவில்லை! ஒரு வாரமாக சாட்டில் மாட்டிக்கொண்ட  அநேகரிடம் தொப்பி தொப்பியை தெரியுமா என கேட்டால் எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் அண்ணாவை பாராட்டியும் அவரின் பதிவுலக ஒதுங்கலை நினைத்து வருத்தமும் தெரிவித்தனர். தரமான எழுத்தும், நடுநிலையான தன்மையும் கொண்ட பதிவர்கள் நெடுநாள் அருகில் இல்லையென்றாலும் கூட அவர்களை பற்றிய நல்ல எண்ணங்கள் நம்மை விட்டு நீங்காது என்பதற்கு சான்று அது!  அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் மீண்டும் ப்ளாக்கில் எழுத வைக்க  முயற்சி செய்யுங்க! திறமையானவங்க ஒதுங்கி இருப்பது வருத்தமா இருக்கு :'( 


இம்புட்டுதூரம் வரைக்கும் பொறுமையா படிச்ச ஜீவன்களுக்கு(ஐய்யோ பாவம்!) என் நன்றிங்கோ
கெளம்புறேனுங்க (ஆமி-நோ நோ இதுக்கெல்லாம் சின்ன புள்ள மாதிரி அழப்படாது! மக்கள்ஸ்- அடபக்கி! கதற கதற அறுத்துட்டிருந்தா அழமாட்டாகளா???)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS